மூன்று நாளைக்கு ‘கடை’லீவு!

 

மூன்று நாளைக்கு ‘கடை’லீவு!

வணிகர் சங்கங்களின் சார்பாக கடையடைப்பு என்றால் அவ்வளவாக யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், டாஸ்மாக் கடையடைப்பு என்றால் பெரும் பரபரப்பாகிவிடுகிறது.

கொரோனா ஊரடங்கில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்ட க்யூவினை பார்த்து தலைமுறை இது. அதனால் இது ஒன்றும் பரபரப்பு இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

மூன்று நாளைக்கு ‘கடை’லீவு!

இந்த மாதம் மூன்று நாள் டாஸ்மாக் கடைக்கு லீவு விட்டிருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் லீவா என்று அலற வேண்டாம்.

ஜனவரி 15ம் தேதி அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும், 28ம் தேதி வள்ளலார் தினைவுதினத்தை முன்னிட்டும் மூன்று நாட்களும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோகன் தகவல் வெளியிட்டிருக்கிறார்.