ஸ்டாலின் காட்டிய மூன்று விரல்…கடுப்பில் வைகோ செய்த செயல்..

 

ஸ்டாலின் காட்டிய மூன்று விரல்…கடுப்பில்  வைகோ செய்த செயல்..

’’வர இருக்கின்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலினிடம் வாழ்த்து சொல்வதற்காகத்தான் வந்தேன்’’ என்று அறிவாலயத்து வாசலில் நின்ற செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

ஸ்டாலின் காட்டிய மூன்று விரல்…கடுப்பில்  வைகோ செய்த செயல்..

ஆனால், உள்ளே அவர், கூட்டணி பேரம் பேசியதாக தகவல் கசிந்தது. 20 சீட் வேண்டும். அது கொடுத்தால் கட்சிக்கும் ஒரு மரியாதை கிடைக்கும். நிச்சயம் 20தொகுதியிலும் வென்று காட்டும் துடிப்பான நபர்கள் இருக்கிறார்கள் என்று வைகோ சொல்ல, மற்ற கட்சி தலைவர்களிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று ஸ்டாலின் சொல்ல, ஏக சந்தோசத்தில் இருந்திருக்கிறார் வைகோ.

ஆனால், தனிச்சின்னத்தில்தான் மதிமுக நிற்கும் என்று வைகோ பேசிவந்தது சுத்தமாக திமுகவுக்கு பிடிக்கவில்லை. மதிமுகவினை தொடர்ந்து விசிக, ஐஜேகே என்று வரிசையாக எல்லா கட்சிகளும் அதையே கூறியதால் கடுப்பாகியிருக்கிறது திமுக.

ஸ்டாலின் காட்டிய மூன்று விரல்…கடுப்பில்  வைகோ செய்த செயல்..

இதனால் உடனே வைகோவுக்கு போன் போட்ட திமுக, ’’சொந்த சின்னத்தில் நிற்பதாக இருந்தால் 3 சீட்டுதான் தரமுடியும். அதுவே உதயசூரியன் சின்னத்தில் நிற்பதாக இருந்தால் கூடுதல் சீட்டு ஒதுக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று சொல்ல, கடுப்பான வைகோ, அதை காட்டிக்கொள்ளத்தான் துணை ஜனாதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் அவசர முடிவுகளை எடுப்பது வைகோவின் வாடிக்கை என்பதால் அப்படி ஒரு முடிவை எங்கே எடுத்துவிடுவாரோ என்று திமுக நிர்வாகிகளை விடவும் மதிமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.