அமைச்சர் வேலுமணி வேலையில் கிருஷ்ணன்… நடிகை விந்தியா பேச்சு

 

அமைச்சர் வேலுமணி வேலையில்  கிருஷ்ணன்… நடிகை விந்தியா பேச்சு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சரா? ஊழலாட்சி துறை அமைச்சரா? என்று கேட்டார்.

அக்கூட்டத்தில் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை கேட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அது அமைச்சர் அனுப்பின ஆள்..’ என்று வேலுமணி மீது குற்றட்சாட்டினார்.

அமைச்சர் வேலுமணி வேலையில்  கிருஷ்ணன்… நடிகை விந்தியா பேச்சு

இந்நிலையில், கிராம சபை கூட்டம் என்று அமைச்சருக்கு எதிராக பேசிய அதே இடத்தில் அதிமுக சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய விந்தியா, ’’கருணாநிதிக்கு இது தான் கடைசி தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லியிருக்கிறோம். ஆனால், உண்மையில் திமுகவுக்கு இதுகடைசி தேர்தல்’’என்றார்.

’’பெண்ணின் இடுப்பை கிள்ளிய தொண்டனுக்கு என்ன தண்டனை? தொண்டனை நாய் என குறிப்பிட்ட ராசாவுக்கு என்ன தண்டனை? கல்வி கடன், விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி என்ன ஆனது? 5,000 ரூபாயில் திருமணம் எப்படி நடத்த முடியும்? செல்லாத 10 பைசா கொண்டு எப்படி காய்கறி வாங்க பேரம் பேச முடியும் ?

அமைச்சர் வேலுமணி வேலையில்  கிருஷ்ணன்… நடிகை விந்தியா பேச்சு

குடும்ப கட்சி நடத்தவில்லை, குடும்பத்தை தான் கட்சியில் இணைத்திருக்கிறேன் என்றால் அழகிரி யார்? ’’என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய விந்தியா,

‘’அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஸ்வாசத்தில் கர்ணன்; வேலையில் கிருஷ்ணன்’’என்றவர், ’’வேலுமணிக்கு ஸ்டாலின் எதிரி அல்ல உதிரி’’என்றார்.

‘’நான் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுக்கு ரசிகை. ராஜேந்திரபாலாஜி பலூனை உடைத்ததை ஸ்டாலின் கிண்டலடிக்கிறார். பலூனை வெடிப்பது வெகுளித்தனம்; பிரியாணி கடை, பியூட்டி பார்லரில் அடிப்பது வெறித்தனம்’’என்று வெடித்தார்.

‘’சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நிற்காது என்கிறார் ஸ்டாலின். அவருக்கு சீப்பு தேவையில்லை. அவர் வைத்திருப்பது விக்’’என்றார்.