ஈபிஎஸ்சிடம் ‘வாழ்க தமிழ்’ என்று சொன்ன டெல்லி முதல்வர்!

 

ஈபிஎஸ்சிடம்  ‘வாழ்க தமிழ்’ என்று சொன்ன  டெல்லி முதல்வர்!

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் “டெல்லியில் தமிழ் அகாடமி” அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டுவிட் போட்டிருந்தார்.

ஈபிஎஸ்சிடம்  ‘வாழ்க தமிழ்’ என்று சொன்ன  டெல்லி முதல்வர்!

முதல்வரின் இந்த டுவிட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்! என்று தமிழிலேயே டுவிட் போட்டிருக்கிறார்.

ஈபிஎஸ்சிடம்  ‘வாழ்க தமிழ்’ என்று சொன்ன  டெல்லி முதல்வர்!

தமிழ் மொழியினையும், தமிழ் கலாச்சாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக டெல்லியில் தமிழுக்கென்று ஒரு அகாடமியை அமைத்திருக்கிறது டெல்லி அரசு. தமிழை ஊக்குவிக்கும் விதமாக இதை செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார்.

டெல்லியில் தமிழுக்கு அகாடமி அமைத்ததற்காக தமிழறிஞர்களும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அந்த டுவிட்டுக்கு தமிழிலேயே பதில் டுவிட் போட்டிருக்கிறார்.