சேர்ந்து வாழ ஒரு வழியுமில்லை… காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை!

 

சேர்ந்து வாழ ஒரு வழியுமில்லை… காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை!

இனி சேர்ந்து வாழ ஒரு வழியுமில்லை என்ற நிலைவந்ததும் அவரவர் இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட காதலர்களின் சம்பவம் கிருஷ்ணகிரி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒருசேர தந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்த்தின் ஓசூர் அடுத்த பாகலூரை சேர்ந்த மஞ்சுநாத்(வயது24), கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்த உறவுப்பெண் சோனியா(வயது22)வை காதலித்து வந்தார்.

சேர்ந்து வாழ ஒரு வழியுமில்லை… காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை!

செல்போனிலேயே படு தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் நேரில் சந்திக்க பிரியப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து, கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பாகலூரில் ஸ்ரீரடி சாய் நகரில் உள்ள மஞ்சுநாத் வீட்டிற்கு அருகே இருக்கும் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார் சோனியா.

பக்கத்து பக்கத்து வீடுதான் என்பதால், யாரும் பார்க்கவில்லை என்று சிரித்து பேசி வந்துள்ளனர். ஆனால், அதை சில கண்கள் கவனித்துவிட்டன. இரண்டு வீட்டாருக்கும் தெரியவர, இரண்டு வீடும் ரகளையாகிவிட்டது.

சேர்ந்து வாழ ஒரு வழியுமில்லை… காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை!

இரு தரப்பில் ஒரு தரப்பு கூட ஒத்துப்போகவில்லை. இனி எந்த காலத்திலும் சேர்ந்த வாழ வழியில்லை என்று நேற்று முன் தினம் சோனியாவிடம் மஞ்சுநாத் அழுதிருக்கிறார். சோனியாவும் மஞ்சுநாத்திடம் போனில் அழுதிருக்கிறார். இரவு நெடு நேரம் வரையிலும் சோனியா வேதனையை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.
அந்த வேதனையுடனேயே கண் அயர்ந்திருக்கிறார் மஞ்சுநாத்.

நேற்று காலையில் தன் வீட்டில் சோனியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி வர அதிர்ச்சியாகி, கதறி அழுதவர், சோனியா இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று தன் வீட்டுக்குள் ஓடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிடிவாதத்தினால் இரு குடும்பமும் தங்களது பிள்ளைகளை இழந்துவிட்டு தவிக்கிறது. இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மங்களூரிவிலும் பெரும் அதிச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.