சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது… கமல் ஆத்திரம்

 

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது… கமல் ஆத்திரம்

பிள்ளையார்நத்தம் விவசாயி நாராயணசாமியின் தற்கொலை உளம் நடுங்கச்செய்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விவசாயிகளின் நிலைமை இதுதான். சாகடிக்கப்படுவதை தற்கொலை என்றா சொல்வது?எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு. சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது என்று தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது… கமல் ஆத்திரம்

கோவில்பட்டி அடுத்த பிள்ளையார் நத்தம் கிராமத்தில் விவசாயி நாராயணசாமி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது 5 ஏக்கர் நிலத்தில் உளூந்து மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். பயிர்கள் பூச்சி அரித்து பாழானதால், அப்போதிருந்தே மனம் உடைந்து போயிருந்த நாராயணசாமி, நேற்று காலையில் தனது நிலத்திற்கு சென்றவர் நெடு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடிச்சென்றார்கள்.

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது… கமல் ஆத்திரம்

அப்போது மரத்தில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் , அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலை செய்த விவசாயி நாராயணசாமி தனது பேட்தி மித்ராவின் மீது பாசமாக இருந்து வந்ததால், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அங்கிருந்த சுவற்றில், ‘மன்னித்துவிடு மித்ரா’ என்று எழுதி வைத்திருக்கிறார்.

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது… கமல் ஆத்திரம்

இதைப்படித்த அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதனர். ஊராரும் இதைப்படித்த போது கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து கமல்ஹாசனும் வேதனை அடைந்துதான் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.