மண்டை க்ளார் அடிக்குதாம்.. அரங்கத்தை கலகலக்க வைத்த அழகிரி

 

மண்டை க்ளார் அடிக்குதாம்.. அரங்கத்தை கலகலக்க வைத்த அழகிரி

மதுரையில் நேற்று நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, ’’திருமங்கலத்தில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து காட்டியது மாதிரியே திருச்செந்தூர் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று சொன்னேன். அதே மாதிரியே 54 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மண்டை க்ளார் அடிக்குதாம்.. அரங்கத்தை கலகலக்க வைத்த அழகிரி

பொதுக்குழுவின் போது, ’பொதுக்குழுவே வருக’ என்று எனக்கு போஸ்டர் அடித்தார்கள். அவர்களை உடனே கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள்.
வருங்கால முதல்வரேன்னு மொத்தமாக போஸ்டர் அடித்து வைத்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அப்பப்ப ஒட்டுறாங்க. அது முடியாது. நான் முதல்வர் ஆவேன்னு சொல்லல.. ஆனா, நீ வர முடியாது. என் ஆட்கள், ஆதரவாளர்கள் உன்னை நிச்சயமாக வர விடமாட்டார்கள்’’என்று ஆவேசம் காட்டினார்.

’’இந்த பிரச்சனைக்கு பிறகு, நானும் மனைவியும் போய் தலைவரைபார்த்தோம். இவங்க ஆட்டமெல்லாம் அடங்கட்டும். அப்புறமாக கட்சியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.

மண்டை க்ளார் அடிக்குதாம்.. அரங்கத்தை கலகலக்க வைத்த அழகிரி

7வருசமாக சும்மாவே இருந்தோம். இப்பவும் சும்மாதான் இருக்கிறோம். விரைவில் ஒரு முடிவை எடுப்பேன். நல்ல முடிவாகவோ, கெட்ட முடிவாகவோ இருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு,

’’நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் என்னுடந்தானே நிற்பீர்கள்?’’ என்று கேட்க, ’’ஆமாம்’’ என்று ஆதரவாளர்கள் குரல் எழுப்ப, எதையும் சந்திக்க தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எத்தனையோ பேரை மந்திரி ஆக்கி இருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. எல்லோரும் கோடீஸ்வரன் ஆயிட்டான்…’’என்று ஆத்திரப்பட்டவர், ’’உங்களது காலை தொட்டு விடைபெறூகிறேன் நன்றி.. நன்றி.’’ஆதரவாளர்களிடம் விடபெற்றார்.

மண்டை க்ளார் அடிக்குதாம்.. அரங்கத்தை கலகலக்க வைத்த அழகிரி

முன்னதாக ஆழகிரி பேசி்யபோது, கூட்டத்தில் ஒரே சலசலப்பு. உடனே அழகிரி, சலசலப்பு வந்த பக்கம் பார்த்து, ‘’கேமரா உட்காருப்பா…’’என்றார். அப்புறமாக, ’’மண்டை கிளார் அடிக்குதாம்.. ( எழுந்து நின்ற வலுக்கைத்தலை நபரை…)என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அரங்கத்தில் ஒரே கலகலப்பு.