சினிமாவைத் தலைமேல் வைத்துக் கொண்டு அலைய… பார்த்திபன் நெகிழ்ச்சி

 

சினிமாவைத் தலைமேல் வைத்துக் கொண்டு அலைய… பார்த்திபன் நெகிழ்ச்சி

மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் தாதாசாகேப் சர்வதேச திரைப்பட அமைப்பு 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவித்துள்ளது. இதில் பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் என்ற பிரிவில் நடிகர் அஜித்குமாருக்கும் ,சிறந்த நடிகருக்கான விருது அசுரன் பட நடிகர் தனுஷுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்திற்காக நடிகை ஜோதிகாவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவைத் தலைமேல் வைத்துக் கொண்டு அலைய… பார்த்திபன் நெகிழ்ச்சி


சிறந்த இயக்குநருக்கான விருது ஒத்த செருப்பு படத்திற்காக இயக்குநர் பார்த்திபனுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த படமாக டு லெட் படமும் தேர்வாகியுள்ளது.

விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவைத் தலைமேல் வைத்துக் கொண்டு அலைய… பார்த்திபன் நெகிழ்ச்சி

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன், சிறந்த இயக்குநருக்காக விருதை பெற்றிருப்பதால், ‘’தா! தா! சாதிக்க இன்னும் பல விருது தா!
எனக்கு மட்டுமல்ல இத்தக் கோரிக்கை… சினிமாவைத் தலைமேல் வைத்துக் கொண்டு அலைய அதன் உயரமும் கூடுவதால் , அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இப்படிப்பட்ட விருதுகள் மேலும் உத்வேகமளிக்கிறது. நன்றி.. தாதா சாஹிப் பால்கே விருது குழுவுக்கு.’’என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது பார்த்திபன் எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிப்பில், பார்த்திபனுக்கு மாலை அணிவித்து படக்குழு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.