டெல்லி போராட்டத்தில் விவசாயி மரணம்

 

டெல்லி போராட்டத்தில் விவசாயி மரணம்

டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் மாரடைப்பினால் மரணம் அடைந்திருக்கிறார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரினையும் பொருட்படுத்தாது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் விரைவில் தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

டெல்லி போராட்டத்தில் விவசாயி மரணம்

டெல்லி போராட்டத்தில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு விவசாயி மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் உயிரித்தியாகம் செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தியும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், இன்று ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி போராட்டத்தில் விவசாயி மரணம்