திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது.. பாஜக தாக்கு

 

திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது.. பாஜக தாக்கு

ரஜினியை கட்சி தொடங்கச்சொல்லி பாஜகதான் அழுத்தம் கொடுத்து வருகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ரஜினி கட்சி தொடங்கவில்லை என்றதும் திமுகதான் ரஜினியை பின்வாங்க வைத்துவிட்டது என்கிறது பாஜக. மேலும், ரஜினியின் முடிவால் திமுகவுக்குத்தான் பாதகம் என்றும் தெரிவித்திருக்கிறது.

திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது.. பாஜக தாக்கு

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ‘’பாஜகதான் ரஜினியை தூண்டியது என்றால் அதே பாஜகவினால் ரஜினியின் பின் வாங்கும் முடிவினை தடுத்திருக்க முடியாதா என்ன?’’ என்று கேள்வி எழுப்பும் சேகர், ‘’ரஜினியை ஐதராபாத் அழைத்து என்று ரத்த அ ழுத்தம் நாடகம் நடத்தி முதல் காட்சியை முடித்து வைத்திருக்கிறது திமுக’’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது.. பாஜக தாக்கு

’’ரஜினியை பின் வாங்க வைத்து வெற்றி அடைந்துவிட்டதாக நினைக்கிறது திமுக. உண்மை என்னவென்றால், திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டிருக்கிறது. ரஜினி நின்றிருந்தால் அதிமுக, பாஜக ஓட்டு பிரிந்திருக்கும். திமுகவுக்கு லாபம் கிடைத்திருக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.