நிம்மதி தராத மகன்… பாசக்கார நாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்த விவசாயி!

 

நிம்மதி தராத மகன்… பாசக்கார நாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்த  விவசாயி!

தன் சொத்துக்களை மனைவி பெயருக்கு உயில் எழுதிய விவசாயி ஓம் நாராயண் வர்மா(வயது50) 2 ஏக்கர் நிலத்தினை தான் வளர்க்கும் நாய்க்கு எழுதி வைத்திருக்கிறார்.

மகன் தன் மீது பாசமாக இல்லாமலும், அடிக்கடி தகராறு செய்து நிம்மதி இழந்து நிற்குமாறு செய்துள்ளார். ஆனால், வளர்ப்பு நாயான நாட்டு நாய் ஜாக்கி, நாராயண் மீது அளவற்ற பாசத்தை பொழிந்து வந்திருக்கிறது.

நிம்மதி தராத மகன்… பாசக்கார நாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்த  விவசாயி!

இதனால் ஒரு முடிவுக்கு வந்த நாராயண், தனக்கு பிறகு தன் சொத்துக்களை அனுபவிப்பது தொடர்பான உயில் எழுதி உள்ளார். அதில், மனைவி சம்பா(47)பெயருக்கு எல்லா சொத்துக்களையும் எழுதி வைத்துள்ள நாரயண், 2 ஏக்கர் நிலத்தினை நாய் ஜாக்கி பெயரில் எழுதி வைத்திருக்கிறார்.

அந்த 2 ஏக்கர் நிலத்தை யார் மராமரிக்கிறார்களோ அவர் அந்த ஜாக்கியை வளர்க்க வேண்டும் என்று உயிலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய பிரதேசம் சிந்தவரா மாவட்டத்தின் பாரிபாடா கிராமத்தில் விவசாயியோட இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.