கலைச்செம்மல் விருது தொகை – விருதாளர்களின் எண்ணிக்கை உயர்த்திய அரசு

 

கலைச்செம்மல் விருது தொகை – விருதாளர்களின் எண்ணிக்கை உயர்த்திய அரசு

கலைச் செம்மல் விருது தொகையினையும், விருதாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை துறைகளின் மரபுவழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் ஆண்டுதோறும் மரபுவழி பிரிவில் ஒரு கலைஞருக்கும் நவீன பாணி பிரிவில் ஒரு கலைஞருக்கும் கலைச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் பணமுடிப்பும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

கலைச்செம்மல் விருது தொகை – விருதாளர்களின் எண்ணிக்கை உயர்த்திய அரசு

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24. 3. 2020 அன்று கலை பண்பாட்டு துறை மானிய கோரிக்கையின் போது, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரால் தமிழ்நாட்டில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை துறைகளில் மரபுவழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளில் புகழ் பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைச் செம்மல் விருது தொகையை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் விருதாளர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஆறு ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படியே ஓவியம் மற்றும் சிற்பக் கலை துறைகளில் மரபு வழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைச் செம்மல் விருது தொகை ஒரு லட்சம் ரூபாய் என்றும், விருதாளர்களின் எண்ணிக்கை 6 ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.