அந்த தகவலை இன்னும் உங்களுக்கு உளவுத்துறை கூட சொல்லி இருக்க மாட்டார்கள்… துரைமுருகன்

 

அந்த தகவலை இன்னும் உங்களுக்கு உளவுத்துறை கூட சொல்லி இருக்க மாட்டார்கள்… துரைமுருகன்

அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அந்த தகவலை இன்னும் உங்களுக்கு உளவுத்துறை கூட சொல்லி இருக்க மாட்டார்கள்… துரைமுருகன்

அவர், தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என்று வீராப்பு பேசியிருக்கும் முதல்வர் பழனிச்சாமிக்கு நான் ஒரே ஒரு தகவலை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏன் என்றால் அந்த தகவலை இன்னும் உங்களுக்கு உளவுத்துறை கூட சொல்லி இருக்க மாட்டார்கள். 10 ஆண்டுகால ஊழல் ஆட்சிக்கு நீங்கள் தமிழக மக்களுக்கு கொடுத்துள்ள தொல்லைகளுக்கு, இன்னல்களுக்கு, போதும் உங்கள் சகவாசம் என்று தங்களது வாக்குகள் மூலம் உங்களைஓட ஓட விரட்டி அடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அந்த தகவலை இன்னும் உங்களுக்கு உளவுத்துறை கூட சொல்லி இருக்க மாட்டார்கள்… துரைமுருகன்

அவர் மேலும், அதுவரை பழனிசாமி அவர்களே என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லுங்கள். மக்கள் நம்ப தயாராக இல்லை முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே சாதனைகளை சொல்ல முடியாமல் திணறிய முதல்வர் பழனிச்சாமி அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடபோகிறார்.
தேர்தல் ஜூரம் என்ற அதிகபட்ச வெப்ப நிலையிலிருக்கும் பழனிச்சாமி சிறப்பான ஆட்சி தந்திருக்கிறோம் என்று புளுகு மூட்டையை அவிழ்த்து கொட்டியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மீதும் அமைச்சர்கள் மீதும் முதற்கட்டமாக கொடுத்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கே பழனிச்சாமி இவ்வளவு பதற்றப்படக்கூடாது. அனைத்து புகார்களையும் கொடுக்கும் போது இவருக்கு தூக்கமே வராது போலிருக்கிறதே என்றும் சொல்லி இருக்கிறார்.