சதிசெய்றது யாருங்க அமைச்சரே? அந்த கருப்பு ஆடு யாரு?

 

சதிசெய்றது யாருங்க அமைச்சரே? அந்த கருப்பு ஆடு யாரு?

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க மிகப்பெரிய சதி நடக்கிறது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு, சதிசெய்றது யாருங்க அமைச்சரே? அதிமுகவின் ஒரு பிரிவின் ஆதரவு இல்லாமல் இரட்டை இலையை முடக்க முடியாதே! அந்த கருப்பு ஆடு யாரு..யாரு? என்று பேராசிரியர் அருணன் உள்பட பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

சதிசெய்றது யாருங்க அமைச்சரே? அந்த கருப்பு ஆடு யாரு?

விருத்தாசலத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.வி.சண்முகம், சில தலைவர்கள் வேண்டுமானால் கட்சிக்கு துரோகம் செய்திருக்கலாம். ஆனால், தொண்டர்கள் அதிமுகவுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.

சதிசெய்றது யாருங்க அமைச்சரே? அந்த கருப்பு ஆடு யாரு?

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் சந்திக்கும் இந்ததேர்தல் நமக்கு வாழ்வா?சாவா? என்பது மாதிரிதான். அந்த அளவுக்கு அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்துகொண்டிருக்கிறது என்றார்.

அவர் மேலும் தனது பேச்சில், நமக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் முடக்க மிகப்பெரும் சதி நடக்கிறது. அதிமுகவின் கட்சி பெயரை பறிக்கவும் சதி நடக்கிறது என்று பரபரப்பினை ஏற்படுத்தினார்.