திமுகவால் டெல்லியில் தமிழ்நாட்டு மானம் போய்விட்டது… அமைச்சர் ஜெயக்குமார்

 

திமுகவால் டெல்லியில் தமிழ்நாட்டு மானம் போய்விட்டது…  அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அல்ல; பிரசாந்த் கிஷோர் தான் என்ற அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றுள்ளனர்.

திமுகவால் டெல்லியில் தமிழ்நாட்டு மானம் போய்விட்டது…  அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் தொடக்க உரை ஆற்றினார். அப்போது அவர், ’’இன்றைக்கு சனிப்பெயர்ச்சி. அதிமுகவுக்கு இனிமேல் நல்ல காலம்தான். ஆனால், திமுகவுக்கு இன்றிலிருந்து சனி பிடிக்கிறது. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதால், அதிமுக மீது பொய்க்குற்றச்சாட்டினை திரும்ப திரும்ப கூறி வருகிறார் ஸ்டாலின்.

இமாலய ஊழல் செய்தது திமுகதான். 2ஜி ஊழலால் டெல்லியிடம் தமிழகம் தலைகுனிய வேண்டி வந்தது. டெல்லி போனாலே தமிழனுக்கு அவ்வளவு மானம் இருக்கும்; மரியாதை இருக்கும். அதையெல்லாம் 2ஜி ஊழலால் கெடுத்தார்கள் திமுக காரர்கள்.

திமுகவால் டெல்லியில் தமிழ்நாட்டு மானம் போய்விட்டது…  அமைச்சர் ஜெயக்குமார்

கச்சத்தீவு உள்பட தமிழ்நாட்டு உரிமைகளையும் காவு கொடுத்தது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்.

திருவாரூரில் இருந்து எப்படி வந்தார்கள்?இன்றைக்கு எத்தனை சொத்துக்கள் இருக்கின்றன? எத்தனை தொலைக்காட்சிகள் அவர்கள் குடும்பத்திற்கு இருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு டிவி ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும். இன்றைக்கு 16 டிவி இருக்கிறது. 16 ஆயிரம் கோடி ரூபாய் எப்படி வந்தது?’’என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அல்ல; பிரசாந்த் கிஷோர் தான். என்ன செய்தாலும் திமுகவுக்கு தோல்விதான் உறுதி ’’ என்று பேசினார்.