ரஜினிக்கு மேலும் பரிசோதனைகள் இருக்குது.. அதனால்..அப்பல்லோ

 

ரஜினிக்கு மேலும் பரிசோதனைகள் இருக்குது.. அதனால்..அப்பல்லோ

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை நாளை காலையில்தான் முடிவு செய்ய முடியும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ரஜினிக்கு மேலும் பரிசோதனைகள் இருக்குது.. அதனால்..அப்பல்லோ

ரஜினிக்கு மேலும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற இருப்பதால், நாளை காலையில்தான் அந்த பரிசோதனைகள் நடைபெற இருப்பதால் அந்த பரிசோதனைகள் நடந்த பிறகே அவர் எப்போது டிஸ்சார்ஜ் என்பதை முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது அப்பல்லோ.

ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறூதியானதால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று காலையில் அவருக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் ஐதரபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்றும், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது.

ரத்த அழுத்தம் சீராகும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி ரஜினி அப்பல்லோவில் இருந்து வருகிறார். நேற்றைவிடவும் இன்றைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அப்பல்லோ தெரிவித்திருந்தது. ஆனால், ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இல்லை. அதுவும் சரியாக வேண்டும் என்றும் மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஓரிரு நாளில் ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.