நாளை ஒரே மேடையில் ஓபிஎஸ் -ஈபிஎஸ்

 

நாளை ஒரே மேடையில் ஓபிஎஸ் -ஈபிஎஸ்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி. மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே மேடையில் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

நாளை ஒரே மேடையில் ஓபிஎஸ் -ஈபிஎஸ்

2021ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றி பெற நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம்தான் இந்த பிரச்சார பொதுக்கூட்டம் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் என்று அதிமுகவில் இரட்டை தலைமை இருக்கும்போது, எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் திடீரென்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பரபரப்பாக போய்க் கொண்டிந்தார். ஆனால், ஓபிஎஸ் அமைதியாக வீட்டுக்குள்ளேயே இருந்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட அவர் வராமல் இருக்கட்டும், வழக்கமாக பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகளையும் கூட ரத்து செய்துவிட்டு, அமைதியாக இருந்து வந்தார் ஓபிஎஸ். இதனால் மீண்டும் ஒரு தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

நாளை ஒரே மேடையில் ஓபிஎஸ் -ஈபிஎஸ்

முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த ஓபிஎஸ், கடைசி நேரத்தில் பலரின் சமாதானத்தினால் இறங்கி வந்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியை முறைப்படி அறிவித்தார். அதுபோலவே, அதிமுகவின் பிரச்சாரத்தின் தொடக்கத்திலும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் இணைந்துதான் தொடங்க வேண்டும். முதல்வர் முதலில் தொடங்குகிறார் என்றாலும் கூட, ஓபிஎஸ் தொடங்கி வைத்திருக்க வேண்டும். அது நடைபெறாததாலும், ஓபிஎஸ்சும் வீட்டுக்குள்ளேயே இருந்ததாலும் சலசலப்பு உண்டானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 21ம் தேதி அன்று, 27.12.2020 அன்று அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் இணைந்து அறிவித்தனர். அதன்படி நாளை காலை 10 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.