மதுரையில் திரளும் அழகிரி ஆதரவாளர்கள்!

 

மதுரையில் திரளும்  அழகிரி ஆதரவாளர்கள்!

தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்று சொல்லி வந்தார் அழகிரி. ஆனால், நீ என்ன என்னை தலைவராக ஏற்றுக்கொள்வது.. உன்னை கட்சிக்குள் ஏற்றுக்கொள்ளவே நான் தயாராக இல்லை என்று ஸ்டாலி கறாராக இருந்துவிட்டார்.

மதுரையில் திரளும்  அழகிரி ஆதரவாளர்கள்!

இதனால் வேறு வழியின்று மதுரையில் வரும் 3ம் தேதி ஆதரவாளர்களூடன் ஆலோசனை நடத்துகிறார் அழகிரி. மதுரை பாண்டிக்கோவில் அருகே துவாரகா பேலசில் இந்த ஆலோசனை நடைபெற இருக்கிறது.

இன்றைக்கு 26ம் தேதிதான் என்றாலும், கூட்டத்திற்கு இன்னமும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இப்போதிருந்தே ஆதரவாளர்கள் மதுரையில் திரண்டு வருகின்றனர்.

ஆலோசனைக்கூட்டம் எப்போது என்று கேட்டபோதெல்லாம், ஆலோசனை கூட்டம் எப்போது கூட்டுவது என்பதற்கும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துவோம் என்று சொல்லிவந்தார் அழகிரி. அதுமாதிரியே, 3ம் தேதி நடைபெற இருக்கும் ஆலோசனைக்கூட்டம் தொடர்பாக மதுரை வரும் ஆதரவாளர்கள், ஒரு மாவட்டத்தில் இருந்து வரும் ஆதரவாளர்கள் இன்னொரு மாவட்டத்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.