ச்சீமானே.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

 

ச்சீமானே.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

இதுநாள் வரை என் தம்பி.. என் தம்பி.. என்று நடிகர் விஜய்யை சொல்லிவந்த சீமான் இப்போது அவருக்கு எதிராக திரும்பியிருப்பதால் எதிர்வினையாற்றி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். ச்சீ..மானே.. நாற வாய்.. கிழி கிழின்னு கிழித்து எடுக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ச்சீமானே.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

தம்பி படத்திற்கு விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கிவிட வேண்டும் என்கிற கனவில் விஜய் தம்பி விஜய் தம்பி என்று சுற்றி சுற்றி வந்தவர் சீமான். அந்த காலகட்டங்களில் விஜய் அரசியலுக்குக் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, அவன் என் தம்பி அவன் வந்தால் என் ஆதரவு நிச்சயம் உண்டு என்று சொன்னவரும் சீமான்.

ச்சீமானே.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

விஜய் கால்ஷீட் கொடுக்காததால் சிம்புவை வைத்து அப்படத்தினை இயக்கப்போவதாக தெரிவித்தார். பின்னர் யாருமே கால்ஷீட் தராததால் அவரே நடிக்கப்போவதாகவும் செய்திகள் வந்தன. கடைசிவரைக்கும் அந்த படத்தை எடுக்கவே இல்லை சீமான்.

ச்சீமானே.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

விஜய் கால்ஷீட் கொடுக்காத அந்த பழைய காண்டு மட்டும் சீமானுக்குள் புகைந்துகொண்டே இருந்திருக்கிறது. இது தெரியாமல், விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லி இருக்கிறாரே? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்க, ‘’ரஜினி, கமலுக்கு கொடுக்கப்போகும் அடியில எந்த நடிகருக்கும் அரசியல் எண்ணமே இனி வராது’’என்றார்.

நீங்க சொல்றது விஜய்க்கும் பொருந்துமா? என்ற கேட்டதற்கு, அவருக்கும் சேர்த்துதான் என்றார்.

ச்சீமானே.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

இதனால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள், அன்று விஜய்யை பாரட்டி பேசியதை போடு அது வேற வாய் என்றும், இப்போதுவிஜய்யை விமரித்ததை போட்டு இது நாற வாய் என்றும், ச்சீ மானே என்றும் கிழித்தெடுத்து வருகிறார்கள்.

வன்மையாக கண்டிக்கிறோம், கொள்கை இல்லாத சீமானே, அரசியலின் செல்லாக்காசு, இது எச்சரிக்கை அல்ல கட்டளை என்று போஸ்டர் அடித்து தமிழக மெங்கிலும் மாவட்டம் தோறும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

எம்.ஜி.ஆரை போற்றி பேசிய சீமான் இன்று அவரை இகந்து பேசியதால் எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அமைச்சர்களும் சீமானை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர்களிடம் வேறு சிக்கியிருக்கிறார்.

சீமானுக்கு என்ன ஆச்சு?