சீமானுக்கு வைகோ பதிலடி! எம்.ஜி.ஆர். செய்ததை யாரும் செய்ய முடியாது என ஆவேசம்!

 

சீமானுக்கு வைகோ பதிலடி! எம்.ஜி.ஆர். செய்ததை யாரும் செய்ய முடியாது என ஆவேசம்!

எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி செய்தார் என்று கேட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, எம்.ஜி.ஆர். மாதிரி யாரும் செய்ய முடியாது என்று பதிலடி கொடுத்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

சீமானுக்கு வைகோ பதிலடி! எம்.ஜி.ஆர். செய்ததை யாரும் செய்ய முடியாது என ஆவேசம்!

எம்.ஜி.ஆர். கொடுத்த நல்லாட்சியை தருவேன் என்று ரஜினி சொன்னதால், கமல்ஹாசனும் அதையே சொல்லி வருவதால், பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி அவர் என்ன நல்லாட்சி செய்தார்? என்று எகத்தாளமாக கேட்டார் சீமான்.

சீமானுக்கு வைகோ பதிலடி! எம்.ஜி.ஆர். செய்ததை யாரும் செய்ய முடியாது என ஆவேசம்!

சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு ,அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய வைகோவிடம் சீமானின் எம்.ஜி.ஆர். குறித்த பேச்சு பற்றி கேட்டபோது, ‘’பெரியாரின் எழுத்துக்களை எம்.ஜி.ஆர். சட்டமாக்கினார். பசித்த வயிறுக்கு உணளித்தார். பிரபாகரனுக்கு அரணாக இருந்து ஈழத்தமிழர் மனதில் எப்போதும் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவர் செய்தது மாதிரி வேறு எவரும் செய்துவிட முடியாது’’ என்று தெரிவித்தார் வைகோ.

சீமானின் எகத்தாள பேச்சுக்கு ஆவேசமாக பதிலளித்தார் வைகோ.