அவர்களது சிம்பலே ‘தாமரை’யாக இருக்கும்போது அவர்கள் இப்படித்தானே தலைப்பு போடுவார்கள்.. பொங்கும் திமுக

 

அவர்களது சிம்பலே ‘தாமரை’யாக இருக்கும்போது அவர்கள் இப்படித்தானே தலைப்பு போடுவார்கள்.. பொங்கும் திமுக

பாஜகவின் அதிகார பலம் ஒரு பக்கமும், அதிமுகவின் பணபல மறுபக்கமும், இவர்கள் வளைத்து வைத்துக்கும் ஊடக பல என திமுக மும்முனை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது என்று நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் மு.க.ஸ்டாலின்.

மேலும், புதுப்புது அஸ்திரங்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். நம்மை எதிர்கொள்ள முடியாமல் புதுசு புதுசாக பலரையும் உருவாக்குகிறார்கள். சிலரை(ரஜினி) கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள். இதனால் பலவீனமாகி விடாமல் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பேசினார் ஸ்டாலின்.

அவர்களது சிம்பலே ‘தாமரை’யாக இருக்கும்போது அவர்கள் இப்படித்தானே தலைப்பு போடுவார்கள்.. பொங்கும் திமுக

நம்மவர்களே நம்மை வீழ்த்த நினைத்தால் அது உண்ட வீட்டுக்கு செய்யும் துரோகம். இப்படிப்பட்டவர்களைத்தான் கட்சி்யின் புற்றுநோய் என்று தலைவர்(கருணாநிதி) சொன்னார். சொந்த கட்சிக்கு துரோகம் செய்து ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக இருப்பவர்கள் அதைவிடவும் மோசமானவர்கள் என்றும் பேசினார் ஸ்டாலின்.

புலம்பல் எனும் தலைப்பில் ஸ்டாலினினோட இந்த பேச்சை பதிவிட்டிருந்தது தினமலர் நாளிதழ். புலம்பல் என்று பதிவிட்டதால் பொங்கி எழுந்திருக்கிறது திமுக.

அவர்களது சிம்பலே ‘தாமரை’யாக இருக்கும்போது அவர்கள் இப்படித்தானே தலைப்பு போடுவார்கள்.. பொங்கும் திமுக

பித்தம் தெளிய எதையும் தின்ன தயாராக இருக்கும் கூட்டத்துக்கு ஸ்டாலின் பேசுவது புலம்பலாகத்தான் தெரியும். வழக்கம் போல் தினம் காலையி கழியும் நாளிதழுக்கு பிரகடனத்துக்கும் புலம்பலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. யார் எதிரி என்று சொல்லி முகத்திரையை கிழித்திருக்கிறார் ஸ்டாலின். அது எப்படி புலம்பல் ஆகும்? என்றும், அதிமுகவை நிராகரிப்போம் என்ற போர்ப்பிரகட முழக்கத்துடன் முன் கள வீரர்களை ஸ்டாலின் களம் இறக்கி விட்டிருக்கிறார் என்பது அதிமுகவை விட அவாள் கூட்டத்துக்கே அதிகமாக அரிக்கிறது என்று ஆவேசத்தை பதிவி செய்திருக்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழனான முரசொலி.

அவர்களது சிம்பலே ‘தாமரை’யாக இருக்கும்போது அவர்கள் இப்படித்தானே தலைப்பு போடுவார்கள்.. பொங்கும் திமுக

மேலும், திமுகவை வீழ்த்தவும் பாஜகவுக்கு பல்லக்கு தூக்கவும் அமைக்கப்பட்டுள்ள பல்லிளிக்கும் பத்திரிக்கை முதலாளிகள் அணியை ஸ்டாலின் தனது பேச்சில் அம்பலப்படுத்தி விட்டார் என்ற ஆத்திரத்தில் புலம்பல் என்று தலைப்பு போடுகிறது. அவர்களது சிம்பலே ‘தாமரை’யாக இருக்கும்போது அவர்கள் இப்படித்தானே தலைப்பு போடுவார்கள் என்று பொங்கி வடித்திருக்கிறது.