ஸ்டாலின் சொன்ன கறுப்பு ஆடுகள் யார்? துரைமுருகன் சொன்ன கறுப்பு ஆடு இவர்தானா?

 

ஸ்டாலின் சொன்ன கறுப்பு ஆடுகள் யார்? துரைமுருகன் சொன்ன கறுப்பு ஆடு இவர்தானா?

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலான அக்கார்டு ஓட்டலில் நடந்த மா.செக்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘’நம் கட்சியில் இருப்போர் இருப்போர் சிலர் எடப்பாடியோடு தொடர்ப் வைத்திருப்பதாக தகவல் வருகின்றது. நேரடியாக நான் கேட்க விரும்பைவில்லை. ஆனால், பொதுவாக கண்டிக்கிறேன். இத்தோடு நிறுத்திவிடுங்கள். எடப்பாடியோடு மட்டும்தான் என்றில்லை, ஆளுங் கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை இருக்கும்’’ என்று எச்சரித்தார்.

ஸ்டாலின் சொன்ன கறுப்பு ஆடுகள் யார்? துரைமுருகன் சொன்ன கறுப்பு ஆடு இவர்தானா?

கறுப்பு ஆடுகளுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர்8 தேதி நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் இப்படி பொங்கியதை போலவே, நேற்று முன் தினம் 20.12.2020 நடந்த மா.செக்கள் கூட்டத்திலும், நம்மவர்களே நம்மை வீழ்த்த நினைத்தால் அது உண்ட வீட்டுக்கு செய்யும் துரோகம். இப்படிப்பட்டவர்களைத்தான் கட்சி்யின் புற்றுநோய் என்று தலைவர்(கருணாநிதி) சொன்னார். சொந்த கட்சிக்கு துரோகம் செய்து ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக இருப்பவர்கள் அதைவிடவும் மோசமானவர்கள் என்று பொங்கினார் ஸ்டாலின். திமுக பொதுசெயலாளரும் கறுப்பு ஆடுக்கு எதிராக பொங்கினார்.
ஸ்டாலின் சொன்ன அந்த கறுப்பு ஆடுகள் யார் என்ற பரபரப்பு எழுந்து இன்னும் அடங்காத நிலையில் அடுத்த பரபரப்பு.

ஸ்டாலின் சொன்ன கறுப்பு ஆடுகள் யார்? துரைமுருகன் சொன்ன கறுப்பு ஆடு இவர்தானா?

’’நமக்குள் கோபம் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், சில கல்நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளம், நன்றி கெட்டு மறந்துபோய் இருக்கிறது. வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி கெட்டு போய் இருக்கிறது’’ என்றும், ‘’60,70 ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு இந்த நன்றி கெட்ட செயலை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது’’என்று கூறினார்.

ஸ்டாலின் சொன்ன கறுப்பு ஆடுகள் யார்? துரைமுருகன் சொன்ன கறுப்பு ஆடு இவர்தானா?

இதையடுத்து துரைமுருகன் சொன்ன கறுப்பு ஆடு யார்? என்ற பரபரப்பு எழுந்தது.

துரைமுருகன் சொன்ன அந்த கறுப்பு ஆடு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் திமுக பேச்சாளர்தான் என்று வலைத்தளங்களில் செய்தி பரவுகிறது.

ஸ்டாலின் சொன்ன கறுப்பு ஆடுகள் யார்? துரைமுருகன் சொன்ன கறுப்பு ஆடு இவர்தானா?

2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில்போது விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து நடத்தப்பட்ட நேர்காணலில், அந்த திமுக பேச்சாளரிடம், மைக் பிடிச்சு பேசுறதோடு நிறுத்திக்க, அதுக்குள்ள உனக்கு தேர்தல்ல போட்டியிட ஆசை வந்துட்டுதா?ன்னு துரைமுருகன் கமெண்ட் அடித்ததாகவும், அந்த கடுப்பில் அவர் போட்டுக் கொடுத்ததால்தான், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடந்தது என்று வலைத்தளங்களில் செய்தி பரவுகிறது.