புதுக்கோட்டையில் கராத்தே சாகசத்தின்போது விபரீதம்… தீக்காயமடைந்த 19 வயது இளைஞர் உயிரிழப்பு!

 

புதுக்கோட்டையில் கராத்தே சாகசத்தின்போது விபரீதம்… தீக்காயமடைந்த 19 வயது இளைஞர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கராத்தே சாகச நிகழ்ச்சியின்போது ஆடையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் கடந்த 14ஆம் தேதி கராத்தே சாதனையாளர்களுக்கான தகுதி பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியை சேர்ந்த 19 வயது இளைஞர பாலாஜி என்பவர் கலந்து கொண்டு, கைகளில் துணியை சுற்றிக் கொண்டு அதில் பெட்ரோலை ஊற்றி தீ பற்றவைத்து, ஓடுகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டையில் கராத்தே சாகசத்தின்போது விபரீதம்… தீக்காயமடைந்த 19 வயது இளைஞர் உயிரிழப்பு!

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றியதில் பாலாஜிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை சக கராத்தே வீரர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பாலாஜிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

காராத்தே சாகச நிகழ்ச்சியில் ஆடையில் தீப்பற்றி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சக கராத்தே வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.