“டேய் இது கோயில் ,என்னை விடுங்கடா” -பெண்ணுக்கு கோவிலுக்குள் நேர்ந்த கொடூரம் .

 

“டேய் இது கோயில் ,என்னை விடுங்கடா” -பெண்ணுக்கு கோவிலுக்குள் நேர்ந்த கொடூரம் .

ஒரு பெண்ணை கோவிலுக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து ,கொலை செய்தவர்களை போலீஸ் கைது செய்தது

“டேய் இது கோயில் ,என்னை விடுங்கடா” -பெண்ணுக்கு கோவிலுக்குள் நேர்ந்த கொடூரம் .


மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேஹு சாலை பகுதியில் உள்ள தாமஸ் காலனியில் ஒரு கணவன் தன் இளம் மனைவியோடு வசித்தார் .அந்த இளம் மனைவி ஒரு சுற்றுலா தலமான குகை கோவிலுக்கு செல்ல ஆசைப்பட்டார் .அதனால் அந்த கணவன் தன் உறவுக்கார வாலிபரிடம் தன் மனைவியை அழைத்து கொண்டு செல்ல சொன்னார் .
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில், அந்தப் பெண்ணும் அவரின் 25 வயதான உறவினரும் கோர்வதேஸ்வர் மலைகளில் உள்ள பழமையான குகைக் கோயிலுக்குச் சென்றனர்.
அப்போது அந்த வாலிபரும் அவரது நண்பர் அக்‌ஷய் கரண்டேவும் அந்த பெண்ணிடம் அந்த கோவிலுக்குள் பாலியல் உதவியை கோரினர் . அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதற்கு மறுத்தார்., ​​பிறகு இருவரும் சேர்ந்து அந்த பெண்ணின் சேலையால் அவரின் கழுத்தை நெரித்தனர் .பின்னர் அந்த பெண் மயங்கியதும் இருவரும் அவரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ,அவரின் தலையில் அடித்து கொன்றுவிட்டனர் .அவர் இறந்தவுடன், அவரின் அடையாளத்தை மறைக்க ,அவரின் முகத்தை கல்லால் அடித்து நொறுக்கினர். பின்னர் அவரின் இறந்த உடலை மலைகளில் உள்ள புதர்களுக்குப் பின்னால் வீசி விட்டு சென்றனர் .பின்னர் அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிந்து அந்த பெண்ணை கொலை செய்தவர்களில் ஒருவரை கைது செய்தது .இன்னொருவரை தேடி வருகிறது .