பண தகராறில் 19 வயது இளைஞர் கல்லால் தாக்கி கொலை – இருவர் கைது

 

பண தகராறில் 19 வயது இளைஞர் கல்லால் தாக்கி கொலை – இருவர் கைது

தூத்துக்குடி

ஶ்ரீவைகுண்டம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் 19 இளைஞரை கொலை செய்து குவாரியில் வீசிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அடுத்துள்ள மீனாட்சிபட்டி அடைக்கலபுரம் கிராமத்தில் கல்குவாரி குட்டையில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க ஶ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் தலைமையில் தனிப்படை அமைத்து, தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

பண தகராறில் 19 வயது இளைஞர் கல்லால் தாக்கி கொலை – இருவர் கைது

இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் பட்டான்டிவிளை பகுதியை சேர்ந்த முத்துச்செல்வம் (19) என்பது தெரியவந்தது. முத்துச் செல்வத்திற்கும், சிவத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ஞான ஸ்டாலின் (23) என்பவருக்கும் இடையே பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஞான ஸ்டாலின், அமல்ராஜ் என்பவருடன் சேர்ந்து முத்துச்செல்வத்தை கல்லால் தாக்கி கொலை செய்து, குவாரி குட்டையில் கை மற்றும் கால்களை கட்டி வீசியது தெரியவந்தது. தொடர்ந்து, கொலையாளிகள் இருவரையும் கைதுசெய்த தனிப்படை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.