“காதலனோடு சேர்த்து வைங்க இல்லேன்னா சேர்த்து வச்ச பணத்தை கொடுங்க” தன்னை தானே கடத்தி பெற்றோரிடம் ஒரு கோடி கேட்ட பெண் ..

 

“காதலனோடு சேர்த்து வைங்க இல்லேன்னா சேர்த்து வச்ச பணத்தை கொடுங்க” தன்னை தானே கடத்தி பெற்றோரிடம் ஒரு கோடி கேட்ட பெண் ..

காதலனோடு சேர்த்து வைக்காத பெற்றோரிடம் ஒரு டீனேஜ் பெண் தன்னை தானே கடத்திக்கொண்டு ஒருகோடி ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பல பணக்கார பெற்றோரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“காதலனோடு சேர்த்து வைங்க இல்லேன்னா சேர்த்து வச்ச பணத்தை கொடுங்க” தன்னை தானே கடத்தி பெற்றோரிடம் ஒரு கோடி கேட்ட பெண் ..
Phone call from unknown number late at night. Scam, fraud or phishing with smartphone concept. Prank caller, scammer or stranger. Man answering to incoming call. Hoax person with fake identity.

உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் ஒரு கோடீஸ்வர தம்பதியினருக்கு ஒரே ஒரு மகளிருந்தார் .அவர் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவரை காதலித்தார் .இதனால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் அந்த பெண்ணிடம் அவனை மறந்து விடு ,உனக்கு வேறொரு பணக்கார இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம் என்றனர் .ஆனால் அந்த பெண்ணோ அந்த ஏழை காதலனைத்தான் கல்யாணம் செய்து கொள்வதாக கூறினார் .இதனால் பெற்றோருக்கும் அந்த பெண்ணுக்குமிடையே பனிப்போர் நிலவியது .
இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் ஒரு ஒரு கோடி செலவு செய்து ஒரு பள்ளிக்கூடம் கட்ட இருந்தனர் ,இதை கேள்விப்பட்ட அந்த பெண் அவர்களின் பெற்றோரிடமிருந்து அந்த பள்ளிக்கூடம் கட்ட வைத்திருந்த ஒரு கோடி பணத்தை ஆட்டைய போட நினைத்தார் .

“காதலனோடு சேர்த்து வைங்க இல்லேன்னா சேர்த்து வச்ச பணத்தை கொடுங்க” தன்னை தானே கடத்தி பெற்றோரிடம் ஒரு கோடி கேட்ட பெண் ..
இதனால் கடந்த வியாழக்கிழமையன்று அவர் திடீரென வீட்டைவிட்டு மாயமானார் .பிறகு அவரின் காதலனோடு சேர்ந்து தன்னுடைய போனிலிருந்து அவரின் பெற்றோருக்கு போன் செய்து அம்மா என்னை யாரோ சில மர்ம நபர்கள் கடத்திவிட்டார்கள் ,அவர்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் என்னை விடுவேன் என்று மிரட்டுவதாக கூறினார் .
இதை உண்மையென நம்பிய அவரின் பெற்றோர் உடனே அருகிலுள்ள போலீசில் தன்னுடைய தொழில் போட்டியாளர் யாரோ ஒருவர் தங்களின் மகளை கடத்திவிட்டதாக புகாரளித்தனர் .போலீசார் அந்த மிரட்டல் வந்த போன் நம்பரை ட்ரெஸ் செய்து பார்த்து ,அந்த பெண் ஒளிந்திருந்த பண்ணை வீட்டிலிருந்து கைது செய்தனர் .பிறகு இந்த கடத்தல் நாடகத்துக்கு உடந்தையாக இருந்த அவரின் காதலனை போலீசார் தேடி வருகிறார்கள் .