மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி பலி!

 

மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த போத்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாச்சரம். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் மூர்த்தி. இவர் தந்தையுடன் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், மூர்த்தி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகேயுள்ள கந்தலம்பட்டி பகுதியில் கட்டுமான பணிக்காக சென்றிருந்தார்.

மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி பலி!

பணியின்போது, இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலிருந்த விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது, தோட்டத்தில் இருந்த மின்கம்பியில் எதிர்பாராத விதமாக கால் சிக்கியதில், மூர்த்தி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பஞ்சாச்சரம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்கறனர். மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் போத்தபுரம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.