சென்னையில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் பலி..அதிகரிக்கும் மரணங்கள்!

 

சென்னையில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் பலி..அதிகரிக்கும் மரணங்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக முதியவர்கள் தான் கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இளம் வயதினர்களும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சென்னையில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் பலி..அதிகரிக்கும் மரணங்கள்!

இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேரும் கே.எம்.சியில் மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.