பொண்டாட்டியோட வாழல…யாரோட வாழ்ந்தாரோ தெரியல.. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரை விமர்சித்த எஸ்.ரா. சற்குணம்

 

பொண்டாட்டியோட வாழல…யாரோட வாழ்ந்தாரோ தெரியல.. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரை விமர்சித்த எஸ்.ரா. சற்குணம்

திமுக மேடையில் ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்துவ பாதிரியார் எஸ்.ரா.சற்குணம்.பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

’’கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கொள்கை. அதை சரியாக செய்துகொண்டிருக்கிறார் மோடி. நாலு பணக்காரர்களை ஆதரிப்பதுதான் அவரது கடமை. அதையும் சரியாக செய்துகொண்டிருக்கிறார்’’என்று பேசினார் எஸ்.ரா. சற்குணம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார் எஸ்.ரா.சற்குணம்.

பொண்டாட்டியோட வாழல…யாரோட வாழ்ந்தாரோ தெரியல.. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரை விமர்சித்த எஸ்.ரா. சற்குணம்

அவர் மேலும், ‘’நானும் ஏழையாக இருந்தவன், டீ வித்துக்கொண்டிருந்தவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொஞ்சமாவது கடவுள் பயம் இருந்தால் கூட மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார். அந்த ஆளு கடவுள பத்திதான் பேசுறாரே ஒழிய கடவுள் பயம் கிடையாது. மனுச பயமும் கிடையாது. ஒரு மனுசன் கல்யாணம் பண்ணினா அஞ்சு நாளாவது பொண்டாட்டியோட வாழ்ந்ததானே கஷ்ட நஷ்டம் தெரியும். நான் பாதர்தான் சொல்றேன். மற்றவர்கள் தவறாக எண்ணக்கூடாது. கல்யாணம் கட்டி ஒரு வாரம் கூட பொண்டாட்டி கூட வாழக்கூடாதா? அப்படி உள்ள உனக்கு இந்த நாட்டை கட்டி ஆள என்ன தகுதி இருக்கிறது?

பொண்டாட்டியோட வாழல…யாரோட வாழ்ந்தாரோ தெரியல.. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரை விமர்சித்த எஸ்.ரா. சற்குணம்

புள்ளகுட்டிகளோட வாழ்ந்தாதானே தெரியும் கஷ்டம் நஷ்டம். யாரோட வாழ்ந்தாரோ தெரியல.. நாம அவருகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தப்படுறோம். அதனால மோடிய ஒழியணும் என்று பிரார்த்தனை செய்வோம்’’என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.