ஸ்டாலினும், கமலும் அடுத்தடுத்து பாடிய பாட்டு!

 

ஸ்டாலினும், கமலும் அடுத்தடுத்து பாடிய பாட்டு!

கன்னியாகுமரியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி..அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி..என்ற எம்.ஜி.ஆர். பட பாடலை சொல்லி, அன்னக்கொடியை காக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் பல எம்.ஜி.ஆர். பட பாடல்களை சொல்லி, அதிமுக ஆட்சியை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கமல்ஹாசன் மீது கடும் தாக்குதல் நடத்தினார்.

ஸ்டாலினும், கமலும் அடுத்தடுத்து பாடிய பாட்டு!

பிக்பாஸ் நடத்துகிறவர் அரசியலுக்கு வரலாமா? அந்த நிகழ்ச்சியின் மூலமாக நல்லா இருக்குற குடும்பங்களை எல்லாம் கெடுக்கிறாரு கமல் என்று சொன்னவர், எம்.ஜி.ஆர். படத்தில் நல்ல கருத்துள்ள பாடல்கள் இருக்குது. இவர் படத்துல ஒரு பாட்டாவது உருப்படியா இருக்குதா? என்று கேட்டார்.

இதையடுத்து கமல்ஹாசன், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று சாதாரணமாக தெரிவித்துவிட்டு, அப்புறமாக ஆரம்பித்தார் ஆட்டத்தை.

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்ற எம்.ஜி.ஆர். பாடலை சொல்லிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தார்.

ஸ்டாலினும், கமலும் அடுத்தடுத்து பாடிய பாட்டு!

உடனே நெட்டிசன்கள், ’’நீங்க லேட்… ஸ்டாலின் இப்பதான் சொல்லி முடித்தார்’’ என்று கமெண்ட் அடித்தார்கள்.

கமல்ஹாசன் சொல்லுவதற்கு முன்னதாக, சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் பாடலை பாடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமரி்த்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.