ஓவைசி, கமலுடன் கூட்டணி இல்லை; தனித்துதான் போட்டி.. சீமான் உறுதி

 

ஓவைசி, கமலுடன் கூட்டணி இல்லை; தனித்துதான் போட்டி.. சீமான் உறுதி

ஓவைசியுடனும் கமலுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ’’ஓவைசியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி சேராது’’ என்றார் அழுத்தமாக.

ஓவைசி, கமலுடன் கூட்டணி இல்லை; தனித்துதான் போட்டி.. சீமான் உறுதி

’’என் தலைவன் பிரபாகரன் என்று சொல்லுவேன். அதனால் பயந்துகொண்டு என் பக்கத்தில் யாரும் உட்கார மாட்டார்கள். அதனால் நாம் தமிழர் கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது. தனித்துதான் போட்டியிடுவோம்.’’ என்றார்.

மேலும், ’’ 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டோம். பிரச்சாரத்திற்கான வேலைகளை பார்த்துகொண்டிருக்கிறோம். அப்புறம் எப்படி கூட்டணி பற்றி பேசுவோம்’’ என்றார் உறுதியாக.