ஒரே ஜிப்பா.. ஒரே பிரதமர்.. கமல் கடும் தாக்கு

 

ஒரே ஜிப்பா.. ஒரே பிரதமர்.. கமல் கடும் தாக்கு

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு, ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதை கொண்டு வந்திருக்கும் பாஜக, இந்தியாவெங்கும் ஒரே மொழி இந்தி என கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மேலும், மோடியே அடுத்த முறை வருவதற்கான காய்நகர்களும் இருக்கின்றது என்ற பேச்சு இருக்கிறது.

ஒரே ஜிப்பா.. ஒரே பிரதமர்.. கமல் கடும் தாக்கு

இந்நிலையில், சீரமைப்போம் தமிழகத்தை என்று மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவிலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், ‘’ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’.

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி! ’’என்று கடுமையாக தாக்கியிருக்கிறார்.

பிஜேபியின் பி டீம் என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் இவ்வாறு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.