மக்களோடு தொடர்பே இல்லாதவரின்பிதற்றலே இது… கமலுக்கு எச்.ராஜா பதில்

 

மக்களோடு தொடர்பே இல்லாதவரின்பிதற்றலே இது… கமலுக்கு எச்.ராஜா பதில்

பாராளுமன்ற கட்டிடத்தின் வயது 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், போதிய இடவசதி இல்லாத சூழலை முன்னிட்டு, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை எழுப்புகிறது மத்திய அரசு. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே எழுப்பப்படும் இந்த புதிய கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் என்றும், கட்டுமான பணிகள் வருகிற 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது.

நாடு தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியில் புதிய பாராளுமன்றம் தேவையா? என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களோடு தொடர்பே இல்லாதவரின்பிதற்றலே இது… கமலுக்கு எச்.ராஜா பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே…. என்று கேட்டிருந்தார்.

மக்களோடு தொடர்பே இல்லாதவரின்பிதற்றலே இது… கமலுக்கு எச்.ராஜா பதில்

இதற்கு பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘’பொய் பரப்புவது என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு எந்த எல்லையும் தேவையில்லை. கடந்த 9 மாதங்களாக 80 கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி/கோதுமை,1கிலோ பருப்பு இலவசமாக மத்திய அரசு அளிக்கிறது. யார் பட்டினி இருக்கிறார்கள். மக்களோடு தொடர்பே இல்லாதவரின்பிதற்றலே இது.’’என்று தெரிவித்திருக்கிறார்.