ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாய்க்கும், மகளுக்கும் திருமணம்!

 

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாய்க்கும், மகளுக்கும்  திருமணம்!

ஒரே நேரத்தில் ஒரே பந்தலில் அண்ணன் -தம்பிகளின் திருமணம் நடந்திருக்கும். அக்கா- தங்கைகளின் திருமணம் நடந்திருக்கும். ஆனால், தாய்க்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திருமணம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

27 வயதான மகளுக்கும் 53 வயதான தாய்க்கும் அரசு செலவில் அதிகாரிகள், அமைச்சர்கள் முன்னிலையில் அத்திருமணம் நடைபெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாய்க்கும், மகளுக்கும்  திருமணம்!

உத்தரபிரதே மாநிலத்தில் கோரக்பூரில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அம்மாநில அரசு 63 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளது. அதில்தான் தாயும், மகளும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு கணவர் ஹரிஹார் உயிரிழந்துவிட்டதால், இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்த பெலிதேவிக்கு, ஹரிஹாரின் தம்பி ஜகதீஷ்(55) உதவியாக இருந்து வந்துள்ளார். அதனால் அவரை கணவனாகவே ஏற்றுக்கொண்டு வாந்து வந்துள்ளார் பெலிதேவி.

இந்நிலையில், பெலிதேவியியின் 27 வயதான இளையமகள், 29 வயதான ராகுல் என்பவரை மணக்க ஏற்பாடுகள் நடந்தன. மாநில அரசின் உதவியுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட திருமண விழாவில் பங்கேற்று திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஜெகதீசையும் முறைப்படி திருமணம் செய்துகொண்டார் பெலிதேவி.

அரசு விழாவில் தாயும், மகளும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டது விழாவில் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.