சித்ராவுக்கு தொல்லை கொடுத்த அரசியல் பிரமுகர் எம்.எல்.ஏவா?

 

சித்ராவுக்கு தொல்லை கொடுத்த அரசியல் பிரமுகர் எம்.எல்.ஏவா?

நடிகை சித்ரா மரணத்தில் எழும் சந்தேகம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சித்ராவின் வருங்கால கணவர் ஹேநாத்திடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் சித்ராவின் தற்கொலைக்கு வேறு யாரேனும் காரணமாக இருப்பார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சித்ராவின் செல்போனுக்கு வந்த சில மெசேஜ்களை வைத்துதான் போலீசாருக்கு அந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அந்த மேசேஜ்கள் அப்படி என்கிறது போலீஸ் வட்டாரம்.

சித்ராவுக்கு தொல்லை கொடுத்த அரசியல் பிரமுகர் எம்.எல்.ஏவா?

அரசியல் பிரமுகர் ஒருவரிடம் இருந்து வந்துள்ள மெசேஜ்களில், தன்னுடன் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார் என்கிறர்கள்.

சீரியல், டிவி ஷோ மட்டுமல்லாது கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று வந்த சித்ரா, கடந்த அக்டோபர் மாதத்தில் பெரம்பலூரில் ஒரு கடை திறப்புவிழாவுக்கு சென்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சித்ராவுடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வனும் பங்கேற்றிருக்கிறார்.

அந்த மேசேஜ்கள் அவர் அனுப்பியதுதானா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் சிலரிடம் இருந்து சர்ச்சைகுரிய மெசேஜ்களும் சித்தாவின் செல்போனுக்கு வந்துள்ளன. அதனால், அவர்களிடம் விசாரித்தால்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் யார் என்று தெரியவரும் என்கின்றனர் போலீசார்.