வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

 

வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

கட்சி தொடங்குவதால் ரஜினியின் இந்த வருட பிறந்தநாளை பெரிதாக கொண்டாட நினைத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் தலைமையிடம் இருந்து அதற்கான சிக்னல் வராததால் அந்தந்த மாவட்டங்களில் தேர் இழுத்தல், மண் சோறு சாப்பிடுதல், உணவு வழங்குதல் என்று ரசிகர்கள் தங்கள் கடைமையை வழக்கம்போலவே சரியாக செய்தனர்.

வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

அதே மாதிரி ரஜினி வழக்கம் போலவே ரசிகர்களை சரியாக ஏமாற்றுவார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றமாதிரி அவரும் கடந்த வாரத்தில் ஐதராபாத் சென்றார். அண்ணனிடம் ஆசி பெற்றுக்கொண்டு, அங்கேயே தங்கி இருந்து அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்துகொள்ளப் போகிறார் ரஜினி என்றும், பிறந்த நாள் அன்று அவர் சென்னையில் இருக்கமாட்டார் என்றும் பேச்சு எழுந்தது.

ஆனால், யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில், ஐதராபாத் சென்ற ரஜினி, அண்ணனிடம் ஆசி பெற்றுக்கொண்டு மறுநாள் அதிகாலையிலேயே சென்னை வந்துவிட்டார்.

தொடர்ந்து அவர் சென்னையில் இருந்ததாலும், அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோருடன் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையும் நடத்தியதால், பிறந்த நாள் கொண்டாட்டம் பெரிதாக இல்லை என்றாலும், பிறந்தநாளில் தங்களை ரஜினி சந்திப்பார் என்றே பெரிதும் நம்பினர் ரசிகர்கள்.

வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

அதன்படியே இன்று காலையில் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டும் முன்பும், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தின் முன்பும் ரசிகர்கள் குவிந்தனர். ஆர்வக்கோளாறில் சில ரசிகர்கள் நேற்று மாலை முதற்கொண்டே கோடம்பாக்கத்தையும், போயஸ்கார்டனையும் சுற்றி சுற்றி வந்திருக்கிறார்கள்.

வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

கடைசிவரையிலும் ரஜினி ரசிகர்களை சந்திக்கவே இல்லை. பிறந்தநாள் அன்று ரசிகர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே கடந்த சில ஆண்டுகளாகவே ஐதராபாத், மும்பை, இமயமலை சென்றுவிடுவது ரஜினியின் வழக்கம். தான் ஊரில் இருக்க மாட்டேன் என்று அறிக்கையும் விட்டுவிடுவார்.

ஆனால், இந்த முறை அவர் வெளியூர் செல்லவில்லை. சென்னையிலேதான் இருந்திருக்கிறார். யாரும் வரவேண்டாம் என்று அறிக்கையும் அவர் விடவில்லை. அப்படியானால் பிறந்தநாளை பெரிதாக கொண்டாடவில்லை என்றாலும், தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு சொல்லிவிட்டு போவதுபோலவே, இன்றைக்கும் வெளியே வந்து, தன்னை வாழ்த்த வந்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனால் கடைசிவரைக்கும் வெளியே வராமல் ஏன் ரஜினி வீட்டுக்குள்ளேயே இருக்கிறார் ரஜினி என்றே பலரும் முணுமுணுத்தனர்.

பாதுகாவலர்களும் சார் ஊரில் இல்லை. அண்ணாத்த படஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஐதராபாத் சென்றுவிட்டா என்று ரசிகர்களிடம் சொல்லி சமாளித்துள்ளார்கள். ரசிகர்களும் அதை உண்மை என்றுதான் நம்பி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

வீட்டுக்குள் இருந்த ரஜினி என் வெளியே வரவில்லை என்று விசாரித்தால், அவர் வீட்டிலேயே இல்லையாம். நேற்று இரவே வீட்டை விட்டு வெளியேறி, அவர் கேளம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், நள்ளிரவில் அங்கே மகள் குடும்பத்தினருடன் பர்த்டே கொண்டாடிவிட்டு இன்றைக்கும் அங்கேயேதான் தங்கி இருக்கிறார். நாளை மதியம்தான் அவர் ஐதராபாத்திற்கு செல்கிறாராம்.

சென்னையிலேயே இருந்தும் ஏன் ரஜினி ரசிகர்களை சந்திக்கவில்லை? என்று கேள்விக்கு அரசியல் நோக்கர்கள் பலரும் பலவிதமாக பேசிக்கொள்கிறார்கள்.

வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

கொஞ்ச நாளாவே ரஜினி ரஜினியாக இல்லை. மனைவி லதாதான் ரஜினியை இயக்கிக்கொண்டிருக்கிறார். கட்சி தொடங்குவது, கட்சி தொடர்பான விவகாரங்கள் எல்லாமே லதா ஏற்பாட்டின் பேரிலேயே நடக்கிறது. துக்ளக் குருமூர்த்தியுடன் கூட அண்மையில் அவர் திருப்பதியில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதன்படிதான் ரஜினி நடக்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி!

தனக்கு விருப்பமில்லாத ஒரு காரியத்தில் கயிறு கட்டி இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டிருக் கிறார்களே என்ற மன உளைச்சலில் இருக்கிறார் ரஜினி. நேற்றைக்கு அப்படி ஏற்பட்ட அப்செட்டில்தான் அவர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி மகள் வீட்டுக்கு சென்றிருக்கிறார். தனக்கு வரும் வாழ்த்துக்களையும், தமிழகம் முழுவதும் தன்னை கொண்டாடும் ரசிகர்களை பாலோவ் செய்துதான் மாலையில் நன்றி மட்டும் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.