அஞ்சலியின் ஆபாச படத்தை வெளிடுவதாக மிரட்டிய வாலிபர்!

 

அஞ்சலியின் ஆபாச படத்தை வெளிடுவதாக மிரட்டிய வாலிபர்!

பத்தாம் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த திருப்பூரை சேர்ந்த இளைஞர் நாகராஜ்(21), இளம்பெண்களின் செல்போன்களுக்கு போன் போட்டு அவர்களின் படங்களை மார்பிங் செய்து, அந்த ஆபாச படங்களை இணையங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளான்.

அவினாசி அடுத்த பெருமாநல்லூரை சேர்ந்த அஞ்சலி(பெயர் மாற்றம்) என்ற 24 வயது பெண்ணிடமும் அப்படி போன் செய்து மிரட்டி இருக்கிறார். 20 ஆயிரம் பணம் கொடுத்தால் வெளியிடமாட்டேன். இல்லாவிட்டா இணையத்தில் வெளியிட்டுவிடுவேன். போலீசுக்கு போனா கண்டிப்பா வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறான்.

அஞ்சலியின் ஆபாச படத்தை வெளிடுவதாக மிரட்டிய வாலிபர்!

அவன் பேச்சினை நம்பி ஏமாந்து போகாமல், உஷாராக பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார் அஞ்சலி. அவர்கள் பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் சொன்னபடியே, அந்த இளைஞருக்கு போன் செய்து, பெருமாநல்லூர் நாலுரோடு பகுதிக்கு வரச்சொல்லி இருக்கிறார். அஞ்சலியிடம் 20 ஆயிரம் வாங்கிச்செல்லாம் என்று ஆசையோடு வந்திருக்கிறான் நாகராஜ்.

அஞ்சலியிடமிருந்து பணத்தை வாங்கும்போது நாகராஜை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்திருக்கிறது.