நான் திருந்திட்டேன்; நீங்க திருந்தலேன்னா நாசமா போங்க.. ரஜினிபாண்டி ஆவேசம்

 

நான் திருந்திட்டேன்; நீங்க திருந்தலேன்னா நாசமா போங்க.. ரஜினிபாண்டி ஆவேசம்

கட்சி தொடங்குவதாக பல காலம் சொல்லிக்கொண்டே வந்த ரஜினி தற்போது கட்சி தொடங்குவதாக முன்வந்திருக்கிறார். ஆனால், கட்சி தொடங்கச்சொல்லி பல ஆண்டுகாலம் வலியுறுத்தி வந்த ரசிகர்களுக்கு முக்கியத்துவம் தராமல் பாஜகவில் இருந்த அர்ஜூனமூர்த்தியையும், பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழருவிமணியனையும் முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இதனால் மனம் நொந்து போன மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர் ’ரஜினி’பாண்டி, ‘’ ரஜினிதான் உலகம்னு வாழ்ந்துட்டு இருந்தேன். ஆனா, இன்னைக்கு ரஜினி பேசுறத எல்லாம் பார்க்கும்போது எனக்கு வருத்தமா இருக்குது. ஆன்மீகத்தை வச்சு எடுத்த பாபா படம் சரியா போகல. அப்புறம் எந்த நம்பிக்கையில ஆன்மீக அரசியல்னு பேசுறார்.

நான் திருந்திட்டேன்; நீங்க திருந்தலேன்னா நாசமா போங்க.. ரஜினிபாண்டி ஆவேசம்

கட்சி ஆரம்பிக்கலன்னு சொல்லுறார். அப்புறம் ஆரம்பிக்கிறேன்னு சொல்லுறார். மாத்தி மாத்தி பேசுறதுலயே எங்களுக்கு பாதி நம்பிக்கை போச்சு. அதுலயும் அவர் இப்போ நடக்குற விதமெல்லாம் பார்த்து மிச்சமிருந்த நம்பிக்கையும் போச்சு.

பாஜக பின்னணி இல்லேன்னு அவர் சொன்னாலும் பாஜகதான் இயக்குதுன்னு நல்லா தெரியுது. ரஜினியா சுயமா வந்து அரசியல்ல நிக்கல. இத்தனை நாளும் அவரை நம்பி முட்டாளா இருந்துட்டேன். இப்ப திருந்திட்டேன். நீங்களும்( ரஜினி ரசிகர்கள்) திருந்துங்க. இல்லேன்னா நாசமா போங்க.’’ என்று ஆவேசமாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.