சித்ரா மரணத்தில் அடிபடும் அமைச்சரின் பெயர்!

 

சித்ரா மரணத்தில் அடிபடும் அமைச்சரின் பெயர்!

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்றுவிட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டுக்கு திரும்புவது சிரமமாக இருந்ததால், நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வந்துள்ளார் சித்ரா.

பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஜேம்நாத்துடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்த நிலையில், அவரும் சித்ராவுடன் அந்த ஓட்டலில் தங்கி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சித்ரா மரணத்தில் அடிபடும் அமைச்சரின் பெயர்!

நேற்று முன் தினம் அதிகாலை 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, அறைக்குள் வந்ததும் காருக்குள் ஒரு பொருளை மறந்துவைத்துவிட்டேன். அதை எடுத்து வாருங்கள் என்று ஹேம்நாத்துடன் சொன்னதாகவும்,அதனால் அறையை விட்டு வெளியேறியதும் சித்ரா அறைக்கதவை சாத்திக்கொண்டார் என்றும் ஹேம்நாத் தெரிவித்திருக்கிறார்.

ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்லி இன்னொரு சாவியை போட்டு திறந்து உள்ளே சென்று பார்த்தால் பட்டுப்புடவையில் சித்ரா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் என்று சொல்கிறார் ஜேஹ்நாத்.

ஆனால், சித்ராவின் தாயாரோ ஹேம்நாத் தனது மகளை அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்.

சித்ரா மரணத்தில் அடிபடும் அமைச்சரின் பெயர்!

சித்ராவின் மரணத்தில் நிலவும் மர்மம் குறித்து விசாரித்து வரும் போலீசர், அந்த ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தமிழக அமைச்சர் ஒருவரின் கார் வந்து செல்வது கண்டு அதிர்ந்தனர். அந்த அமைச்சர் யார்? எதற்காக அவர் நள்ளிரவில் ஓட்டலிக்கு வந்து செல்கிறார்? என்பது குறித்து போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

செல்வாக்கான அமைச்சர் ஒருவர் அடிக்கடி சென்னை புறநகரில் உள்ள ஓட்டல்களில் நடிகைகளுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவர்தான் அன்றும் வந்தாரா? அல்லது வேறு எந்த அமைச்சர் வந்தார்? எதற்காக வந்தார்? என்பதை கவனமாக விசாரித்து வருகிறார்கள்.