என்கிட்டயே கேட்குறீயா..? ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் அடாவடி

 

என்கிட்டயே கேட்குறீயா..? ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் அடாவடி

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் ரேவதி. இவர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள காஜா சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, இவரது காரை நிறுத்தி டோல்கேட் கட்டணம் செலுத்த சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ரேவதி கட்டணம் செலுத்த முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

என்கிட்டயே கேட்குறீயா..? ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் அடாவடி

அதுமட்டுமல்லாமல், எல்லோரையும் போல் என் காரை வரிசையில் அனுப்பாதே. ஸ்பெஷல் கேட் வழியாக சீக்கிரம் அனுப்பு என்று கேட்டிருக்கிறார். கட்டணம் கட்ட வேண்டுமென்றும், சிறப்பு வழி எல்லாம் கிடையாது என்றும் டோல்கேட் ஊழியர் சொன்ன பிறகும் ரேவதி பிடிவாதமாக இருந்ததால், காரை விட மறுத்து குறுக்கே தடுப்பினை வைத்திருக்கிறார்கள்.

என்கிட்டயே கேட்குறீயா..? ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் அடாவடி

இதனால் ஆத்திரமடைந்த ரேவதி, ’’என்கிட்டயே கேட்குறீயா..?’’ என்று சத்தம் போட்டுக்கொண்டே, தடுப்பினை பிடித்து தள்ளிவிட்டு, டோல்கேட் ஊழியர்களை கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

என்கிட்டயே கேட்குறீயா..? ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் அடாவடி

ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் இந்த அடாவடி வீடியோ வைரலாகி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

என்கிட்டயே கேட்குறீயா..? ஆளுங்கட்சி பெண் பிரமுகரின் அடாவடி