கடுகடு அழகிரி இன்றைக்கு கலகல அழகிரி!

 

கடுகடு அழகிரி இன்றைக்கு கலகல  அழகிரி!

கடுகடு என்று வழக்கம்போல பேசாமல் இன்றைக்கு கலகல என்று பேசினார் மு.க.அழகிரி. பாட்டு, டான்ஸ், நண்பர்கள் வட்டம் என்று ஜாலியான ஆள்தான் அழகிரி. ஆனால் அரசியல் அழுத்தங்களால் பேட்டி என்றாலே கடுகடு என்று மாறிவிடுவார். ஆனால், இன்றைக்கு அப்படி அல்ல.

கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வரும் டிசம்பர் 31ம்தேதி அறிவிப்பேன் என்று அண்மையில் அறிவித்தார் நடிகர் அறிவித்தார். கட்சி தொடங்குவது ஒரு தேதி அந்த தேதியை அறிவிப்பது ஒருதேதி, அந்த தேதியை அறிவிப்பதற்கு ஒரு தேதி. அந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று அறிவிப்பதற்கு ஒரு தேதி…இப்படி ஜவ்வா இழுத்தடித்தடிக்கும் ரஜினியை பலரும் விமர்சித்து வரும் நிலையில் முன்னாள்மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் அப்படி ஒரு ஜவ்வு பேச்சை இழுத்துக்கொண்டிருக்கிறார்.

கடுகடு அழகிரி இன்றைக்கு கலகல  அழகிரி!

வரும்சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என்று அவர் சொன்னதும், தனிக்கட்சியா, பாஜகவுடன் அல்லது ரஜினியுடன் கூட்டணியா என்றெல்லாம் பரபரப்பு பேச்சு இருக்கும் சூழலில் இன்று மதுரை அழகர்கோயிலில், அழகிரியை சந்த்தித்த செய்தியாளர்கள், ‘’அரசியலில் எனது பங்களிப்பு என்றால்.. என்ன பங்களிப்பு’’ என்று கேட்க, ‘’புதிய கட்சி, கூட்டணி,,இன்னும் ஏன் ஓட்டுபோடுவேன். அதுவும் பங்களிப்புதானே’’என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

ஆலோசனைக்கூட்டத்தில் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறீர்களே. ஆலோசனைக்கூட்டம் எப்போது? என்று கேட்க, ‘’ஆலோசனைக்கூட்டம் எப்போது என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

மீண்டும் மீண்டும் அதே கேள்வியை அவரிடம் கேட்க, ‘’அதான் ஆலோசனைக்கூட்டத்தை எப்போ கூட்டுறதுன்னு அதுக்கும் ஒரு ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்குறோம்’’என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு போனார்.

ரஜினி கட்சியில் சேருகிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘’அவருடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நடிக்கலாம்..’’என்று கமெண்ட் அடித்தார்.