பெண்களின் ஜாக்கெட்டை கழட்டி…ஸ்ரீரங்கத்து அதிர்ச்சிகள்!

 

பெண்களின் ஜாக்கெட்டை கழட்டி…ஸ்ரீரங்கத்து அதிர்ச்சிகள்!

பெண்களின் ஜாக்கெட்டை கழட்டிவிடச்சொல்லி ஸ்ரீரங்கம் மேனியில் சூடு வைக்கும் சம்பிரதாயம் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வருகிறது. இது பெருமாளுக்கு செய்யும் கைங்கர்யம் என்றும், பஞ்ச சம்ஸ்காரம் என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது, ஸ்ரீவைஷ்ணவர்களாக பிறந்தவர்களும், ஸ்ரீவைஷ்ணவத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யனிடம் கட்டாயமாக பஞ்ச ஸம்ஸ்காரம் என்ற ஸமாஸ்ரயணம் பெற்றுக்கொள்ள வேண்டுமாம்.

பெண்களின் ஜாக்கெட்டை கழட்டி…ஸ்ரீரங்கத்து அதிர்ச்சிகள்!

அதனால்தான் தாப ஸம்ஸ்காரம், புண்ட்ர ஸம்ஸ்காரம், நாம ஸம்ஸ்காரம், மந்திர. ஸம்ஸ்காரம், யாக ஸம்ஸ்காரம் எனும் ஐந்து விதமான சடங்குகள் செய்துகொள்வது புனிதமாக்குதல் என்கிறார்கள்.

இதில், ஆச்சார்யன் சுதர்ஸன ஹோமம் செய்து யாககுண்டத்தில் சங்கு சக்கர முத்திரைகளை முறைப்படி பழுக்கவைத்து தன் சீடனின் வலது தோளில் சக்கரச் சின்னமும், இடது தோளில் சங்குச் சின்னமும் ஒற்றி எடுத்தல்தான் தாப ஸம்ஸ்காரம்.

பெண்களின் ஜாக்கெட்டை கழட்டி…ஸ்ரீரங்கத்து அதிர்ச்சிகள்!

ஆச்சார்யன் தன் கைகளால் சீடனின் மேனியில், பன்னிரெண்டு இடங்களில் திருமண் இட்டுவிடுதல், புண்ட்ர ஸம்ஸ்காரம். அதாவது வயிற்றில் மூன்று, மார்பில் ஒன்று, இரு தோள்களில் ஒவ்வொன்று, கழுத்தில் மூன்று, நெற்றியில் ஒன்று, பின் கழுத்தில் ஒன்று, முதுகுத் தண்டின் நடுவில் ஒன்று என உடலில் 12 இடங்களில் இடப்படுவதே புண்ட்ர ஸம்ஸ்காரமாம்.

இப்படிப்பட்ட சாஸ்திர சம்பிரதாய சடங்குகள் எல்லாம் தேவையா? என்ற விமர்சனம் ஒருபக்கம் இருக்கையில், அது எங்கள் குலத்தில் இருக்கும் முறை என்று அவர்களும் சொல்லி வரும் நிலையில், பெண்கள் ஜாக்கெட்டை கழற்றி சடங்குகள் செய்யும் படங்களை வலைத்தளங்களில் பரப்புவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களின் ஜாக்கெட்டை கழட்டி…ஸ்ரீரங்கத்து அதிர்ச்சிகள்!

தாப ஸம்ஸ்காரம், புண்ட்ர ஸம்ஸ்காரம் சடங்குகள் எல்லாம் தேவையா என்றூ கேட்டால், அபச்சாரம் அபச்சாரம் என்று கொதிப்பவர்கள், வலைத்தளங்களில் வைரலாகி ஆபாச படங்கள் போல் பார்க்கப்படுவது அபச்சாரமாக தெரியவில்லையா என்றும் கேட்கிறார்கள் பக்தர்கள்.