கூட்டிக்கொடுத்துதான் கருணாநிதி முதல்வர் ஆனாரா? ஆர்.எஸ்.பாரதியை அடக்கிய ஆ.ராசா

 

கூட்டிக்கொடுத்துதான் கருணாநிதி முதல்வர் ஆனாரா? ஆர்.எஸ்.பாரதியை அடக்கிய ஆ.ராசா

அதிமுக தொடர்ந்து திமுக மீது 2ஜி வழக்கினை சொல்லி குற்றம்சாட்டி வரும் நிலையில், அது குறித்து விளக்குவதற்காக இன்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதியும் அருகில் இருந்தார்.

2ஜி வழக்கின் தீர்ப்பு பக்கங்கள் மற்றும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பக்கங்கள் ஆகியவற்றை ஆதாரமாக வைத்துக்கொண்டு செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார் ராசா.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ராசா.

கூட்டிக்கொடுத்துதான் கருணாநிதி முதல்வர் ஆனாரா? ஆர்.எஸ்.பாரதியை அடக்கிய ஆ.ராசா

ஜெயலலிதாவை ஆத்தா என்று விமர்சிப்பது குறித்த கேட்டபோது, ‘’ஆத்தா என்பது வட்டார வழக்கு. அது தவறாக தெரிந்தால் நான் அப்படி பேசவில்லை’’என்றார். முதல்வரை சவாலுக்கு அழைத்தது பற்றி கேட்டபோது, ‘’நன்கு யோசித்து பேசியிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்’’ என்றார்.

அப்போது ஒரு நிருபர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து வந்து முதல்வர் ஆனார் என்று நீங்க சொன்னதாக குற்றச்சாட்டு இருக்குதே? என்று கேட்க, ’’தெரிந்தோ தெரியாமலோ அவர் உங்களுக்கும் முதல்வர். எனக்கும் முதல்வர். அதனால் அவரைப்பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை’’என்று சொன்னதும்,

கூட்டிக்கொடுத்துதான் கருணாநிதி முதல்வர் ஆனாரா? ஆர்.எஸ்.பாரதியை அடக்கிய ஆ.ராசா

அண்ணா மறைவுக்கு பிறகு ஈசிஆரில்(கிழக்கு கடற்கரை சாலை) பங்களாக்களில் துணைநடிகைகளை பயன்படுத்தித்தான் முதல்வர் ஆனார் கருணாநிதி என்று குற்றம் சாட்டுகிறார்களே என்ற நிருபர் கேட்டபோது,

’’இந்த மாதிரி ரெண்டாம் தர ஆட்கள் பேசுற பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன். இதெல்லாம் ஒரு இதுவா… ஓட்டல் அது இதுன்னு.. ’’என்று ஆ.ராசா சொல்ல,

அதுவரைக்கும் அமைதியாக ஆ.ராசா அருகே அமர்ந்திருந்த ஆர்.எஸ்.பாரதி, ‘’கருணாநிதி பற்றி பேசியதால் நான் பேசவேண்டியதாகிவிட்டது. கருணாநிதி கூட்டிக்கொடுத்துதான் முதல்வர் ஆனார் என்றால், அவர் முதல்வர் ஆகும்போது எம்.ஜி.ஆர். உடன் இருந்தார். அப்படி என்றால் அவரும் அதுக்கு உடந்தையா?’’என்று கேட்டார்.

கூட்டிக்கொடுத்துதான் கருணாநிதி முதல்வர் ஆனாரா? ஆர்.எஸ்.பாரதியை அடக்கிய ஆ.ராசா

உடனே குறுக்கிட்ட ஆ.ராசா, ‘’நீங்க வேற..நீங்க அதுக்கு மேல …கூட்டிக்கொடுத்தேன்னு… அசிங்கமா..’’என்று சொல்லி ஆர்.எஸ்.பாரதியை அடக்கினார்.

துணைநடிகைகளை பயன்படுத்தித்தான்…என்று நிருபர் சுற்றி வளைத்து கேட்டதை, கூட்டிக்கொடுத்துதான்… என்று ஆர்.எஸ்.பாரதியே நேரடியாக பேசியதால், அவரே மறைமுகமாக கேட்கிறார்.. நீங்க வெளிப்படையாக சொல்லுறீங்களே என்கிற ரீதியில்தான், ஆர்.எஸ்.பாரதியை அதற்கு மேல் பேசவிடாமல் தடுத்துவிட்டார் ராசா.