போதும் போதும் ஏமாந்தது போதும்… ஒரு நாயகன் உதயமாகிறான்

 

போதும் போதும் ஏமாந்தது போதும்… ஒரு நாயகன் உதயமாகிறான்

சென்னை மாநகரமெங்கும் போதும் போதும் ஏமாந்தது போதும் என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது காங்கிரஸ் அல்லது திமுகவின் பிரச்சாரமாக இருக்கலாமென்று பலரும் யோசித்தபடியே கடக்கின்றனர்.

போதும் போதும் ஏமாந்தது போதும்… ஒரு நாயகன் உதயமாகிறான்

சில போஸ்டர்களில் மட்டும், அது ‘மை இந்தியா கட்சி’யின் போஸ்டர் என்று தெரியவருகிறது. உதயமாகிறது புதிய கட்சி என்று ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டரில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாக்ஸ் இல்லாத தமிழ்நாடு என்ற கட்சியின் கொள்கை அச்சிடப்பட்டிருக்கிறது. கட்சியின் தலைவர் அனில்குமார் ஓஜாவாம்.

போதும் போதும் ஏமாந்தது போதும்… ஒரு நாயகன் உதயமாகிறான்

சென்னை அமைந்தகரையில் லட்சுமி தியேட்டருக்கு அருகே இக்கட்சி அலுவலகம் அமைந்திருப்பதாக தகவல்.

மை இந்தியா கட்சி என்பதற்கு கீழே இது நம்ம கட்சி என்ற வாசகம் வேறு.

கட்சி அலுவலக எண்ணிற்கு தொடர்புகொண்டால், நீங்கள்தொடர்புகொள்ளும் எண் +என்ற பதில் வருகிறது. இது அந்த கட்சிக்கும் பொறுத்தமாக இல்லாமல் இருந்தால் சரிதான்.