சரத்குமாரிடம் நலம் விசாரித்த முதல்வர்

 

சரத்குமாரிடம் நலம் விசாரித்த முதல்வர்

நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், உடல்நலக்குறைவினால் ஐதராபாத்தில் பரிசோதனை செய்தபோது, அறிகுறிகள் இல்லை என்றாலும், கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், மருத்துவர்களின் கண்காணிப்பில் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ராதிகா சரத்குமாரும், மகள் வரலட்சுமி சரத்குமாரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சரத்குமாரை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

சரத்குமாரிடம் நலம் விசாரித்த முதல்வர்

இதுகுறித்து முதல்வர், ‘’சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு.சரத்குமார் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். விரைவில் அவர் பூரண குணமடைய விழைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.