கடிச்சுக்கிட்டே குடிக்கலாம்… மதுரை, கேரளாவை கலக்கும் பிஸ்கட் கப் டீ

 

கடிச்சுக்கிட்டே குடிக்கலாம்… மதுரை, கேரளாவை கலக்கும்  பிஸ்கட் கப் டீ

பொதுவாக எல்லோரும் டீ கடைக்கு போன, பிஸ்கட் எடுத்து கடிச்சுக்கிட்டே டீ சாப்பிடுவது வழக்கம். இதையெல்லாம் மனதில் வைத்து, தொழிலில் புதுமையும், வியாபாரத்தில் முன்னேற்றத்தையும் கொண்டு வரும் நோக்கில் வந்திருக்கிறது பிஸ்கட் கப் டீ. ஒருமுறை உபயோகித்துவிட்டு பேப்பர் கப்பில் டீ குடித்தவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவத்தை தரும். கிட்டத்தட்ட கோன் ஐஸ் அனுபவத்தையே தரும்.

கடிச்சுக்கிட்டே குடிக்கலாம்… மதுரை, கேரளாவை கலக்கும்  பிஸ்கட் கப் டீ

ஐஸ்கிரீமை சாப்பிட்டுக்கொண்டே கோனை கடித்து சாப்பிடுவது போல, பிஸ்கட் கப்பை கொஞ்சம் கடித்துக்கொண்டு, கொஞ்சம் டீயை உறிஞ்சலாம். மதுரையில் கலக்கிய இந்த பிஸ்கட் கப் டீ இப்போது கேரளாவையும் கலக்கி வருகிறது.

திருச்சூரில் ராதாகிருஷ்ணா பேக்கரியில் இந்த பிஸ்கட் கப் டீ கிடைக்கிறது. இந்த பிஸ்கட் கப் டீ 20 ரூபாய்தான் என்பதால், பொதுமக்கள் இந்த பேக்கரியில் குவிகிறார்கள்.

சூடான டீயை 20 நிமிசத்துக்கு மேல் இந்த கப் உருகாமல் வைத்திருக்கிறது.

சாக்லேட் சுவையில் கிடைக்கும் இந்த கப்கள் விரைவில் வெண்ணிலா, ஸ்டாபெரி சுவையிலும் கிடைக்கவிருகிறது என்கிறார்கள்.