மத்திய அரசு மனம் திறக்க வேண்டும்.. வைரமுத்து கோரிக்கை

 

மத்திய அரசு மனம் திறக்க வேண்டும்.. வைரமுத்து கோரிக்கை

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில் டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் தீவிர போராட்டத்தை தொடர்கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதிலும் இன்று பாரத் பந்த் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு மனம் திறக்க வேண்டும்.. வைரமுத்து கோரிக்கை

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து,
ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்.

– என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.