திமுக அழுகிப்போன தக்காளி: அதுகூட்டுக்கும் உதவாது; குழம்புக்கும் உதவாது … அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

 

திமுக அழுகிப்போன தக்காளி: அதுகூட்டுக்கும் உதவாது; குழம்புக்கும் உதவாது … அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அதிமுக மீது தினமும் ஊழல் புகார் கூறிவந்த ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இதனால் பதிலுக்கு ராஜேந்திரபாலாஜியை கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.

ராஜேந்திரபாலாஜியும் இந்த விவகாரத்தை விடாமல் ஸ்டாலின் மீது கடும் தாக்குதல் நடத்தினார்.

இதனால் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கொந்தளித்தார்கள். அந்த விவகாரமே இன்னமும் முடியாத நிலையில், முதல்வரை ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருவதால் மீண்டும் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததால் விருதுநகரில் ராஜேந்திரபாலாஜியின் உருவ பொம்மையை எரித்தனர் திமுகவினர். பதிலுக்கு ஸ்டாலின் உருவபொம்மையை எரித்தன அதிமுகவினர். அதிமுக – திமுகவினரிடம் மோதலால் விருதுநகரில் பதற்றம் ஏற்பட்டு, போலீசார் தடியடியும் நடத்தியுள்ளனர்.

திமுக அழுகிப்போன தக்காளி: அதுகூட்டுக்கும் உதவாது; குழம்புக்கும் உதவாது … அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,முதல்வர் பற்றியும், துணை முதல்வர் பற்றியும் யார் விமர்சித்தாலும் நான் பதிலடி கொடுப்பேன். எங்கள் நிர்வாகிகளை மரியாதையாக விமர்சித்தால் நாங்களும் மரியாதையாக விமர்சிப்பேன். தரக்குறைவாக விமர்சித்தால் அப்படித்தான் பேசுவோம் என்று தெரிவித்துள்ளவர்,

நான் கோமாளி அல்ல. ஸ்டாலின் தான் கோமாளி. தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் ஏமாளியாகப் போகிறார் என்றும், திமுக அழுகிப்போன தக்காளி; அது கூட்டுக்கும் உதவாது குழம்புக்கும் உதவாது – என்றும் தெரிவித்திருக்கிறார்.