சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்! ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

 

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்! ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

நேற்று ஐதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணன் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

வழக்கமாக விமானப்பயணங்கள் மேற்கொள்ளும் ரஜினிகாந்த் வெளிப்படையாகத்தான் செல்வார். இதனால் விமான நிலையங்களில் பொதுமக்கள் பலரும் அவரை செல்போனில் படம் பிடிப்பார்கள்.
செய்தியாளர்களும் அவரை மொய்த்துக்கொள்வார்கள். பெரும் காவல் படையுடன் தான் அவர் விமான நிலையம் விட்டு வெளியே வருவார்.

கட்சி தொடங்குவதாக அறிவித்தது முதல், இந்த பரபரப்புக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பொதுமக்கள்,மீடியாக்கள் கண்ணில்படாமல் சென்றுவருகிறார் ரஜினிகாந்த்.

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்! ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

நேற்று ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்யநாராயணனிடம் ஆசி பெறும் போட்டோ வெளியாகியது.

இதையடுத்து, ரஜினிகாந்த் தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்து அண்ணாத்தே படத்தின் ஷுட்டிங்கை முடித்துக்கொடுக்கப் போவதாகவும், கட்சி தொடர்பாக முக்கியமானவர்களை சென்னையில் சந்தித்தால் தகவல் வெளியே போய்விடுகிறது என்பதால், ஐதராபாத்திலேயே தங்கி இருந்து ஆலோசனை நடத்த இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

ஆனால் ரஜினிகாந்தோ இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்துவிட்டார். ‘’நேற்று வந்ததும் சூடா சாப்பிட்டுவிட்டு ரெஷ்ட் எடுத்தார். இன்று காலை 5 மணிக்கே புறப்பட்டு 12 மணிக்கு சென்னை போய் சேர்ந்துட்டார். வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன்னு எனக்கு போன் செய்தும் சொல்லிட்டார்’’ என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் ரஜினிகாந்த் சென்னை திரும்பிவிட்டதை உறுதி படுத்தி இருக்கிறார்.

கட்சி தொடங்க இருப்பதால் வரும் 12ம் தேதி ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாவிருக்கிறார் ரஜினிகாந்த் என்றே தெரிகிறது. அதனால்தான் முன்கூட்டியே சென்று அண்ணனிடம் ஆசி வாங்கிவிட்டு வந்திருக்கிறார் ரஜினி என்றே தெரிகிறது.