டெல்லி சலோவில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

 

டெல்லி சலோவில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக நடைபெற்றும் வரும் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்தில் நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.

டெல்லி சலோவில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர்,

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை!

டெல்லி சலோவில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப் பாளர்களுக்குப் புரட்சி வாழ்த்துகள்! வேளாண் பெருங்குடிகளின் அறப்போராட்டம் வெல்லட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.